Tuesday, August 16, 2011

குமரப் பருவ மனச்சிதைவு நோய்



நோயின் வகைகளும் அறிகுறிகளும்:

மனச்சிதைவ்வு நோயைப் பலவாறாக் வகைப்படுத்தினாலும் இந்த விவரங்கள் சுலபாமாகத் தெரிந்துகொள்ள ஏற்பட்ட மரபாகும்.ஒருவகையாக கருதப்பட்ட நோயாளி மற்றொரு வகைக்கு மாறுவதுண்டு.

குமரப் பருவ மனச்சிதைவு நோய்:

இவ்வகை நோய் குமரப்பருவத்தின் முதல் கட்டத்தில் சிறுகச்சிறுகத் தோன்றும். நோயாளி அநேகமாக மணமாகாதவராகவும், வேலையற்றவராகவும் இருப்பார். அவர் குடும்பத்தில் எவரேனும் ஒருவர் மனச்சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

அறிகுறிகள்:

இவர்களின் உணர்ச்சி, சிந்தனை மழுங்கியதாகவும் முரண்பாடனதாகவும் இருக்கும். அசட்டுத்தனம், பல்லிளிப்பு, பொருளற்ற புன்னகை, சிரிப்பு முதலியன இவர்களிடம் காணப்படும். கண்ணாடி முன் நின்று அடிக்கடி தன் அழகு பார்த்து சிரிப்பது இவர்களிடம் காணப்படும் அறிகுறியாகும். போலிக்கண்ணோட்டம், கற்பனை உலகில் சஞ்சரித்தல், தொடர்பற்ற தவறான நம்பிக்கைகள் முதலிய அறிகுறிகள் காணப்படும். மேலும் பேச்சு தொடர்பில்லாமலும், அர்த்தமற்றதும், மரபில் இல்லாத புதுபுது வார்த்தைகளை உபயோகிப்பர். இவர்களுடைய எழுத்தும், வரையும் படங்களும் பொருளற்றுக் காணப்படும். எவருடனும் உறவாடமல் தனித்து இருப்பர். பண்பியல் தொகுத்துச்சிதைந்து மனித இயல்புகளை இழந்து விடுவர். இதுவே மற்ற நோயாளிகளுக்கும் இவர்களுக்கும் உள்ள வேறுபாடாகும்.

சிந்திக்கும் திறன் சீரழிவதால், பேச்சு பிறர் புரிந்து கொள்ளும் தன்மையை இழந்து மொழியில் இல்லாத ஓலிக் கூட்டகவே இருக்கும். கற்பனையில் தோன்றும் எண்ணங்களும் உணர்வுகளும் கட்டுக் கோப்பின்றி ஒப்பனைகளின்றி இருக்கும். மிகவும் இளம் வயதில் தோன்றும் இவ்வகை நோயுடையோர் உரிய தருணத்தில் மருத்துவம் பெற்றால் நல்ல பலங்களை எதிர்பார்க்கலாம்.

21 வயதுள்ள மூர்த்தி, மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவர். நன்றாகப் படித்துக்கொண்டிருந்தவர், சில நாட்களாக நண்பர்கள் அனைவருடனும் அடிக்கடி வாக்குவாதம் செய்தார். காரணமின்றி சிரித்துக் கொள்வார். அடிக்கடி கல்லூரி பெண்களிடம் பல்லிளிபது மற்றும் அசட்டுத்தனமாக ஏதாவது செய்து கொண்டிருந்தார். ஆன்மாவும், அறிவியலும் என்ற தலைப்பில் ஒருநாள் அவர் ஏதேதோ பேசவும், தத்துவங்கள் பேசவும் செய்தார். அர்த்தமில்லாத விஞ்ஞான கருத்துக்ளையும் சில அறிவியல் குறியீடுகளையும் பயன்படுத்தி பொருளற்ற வரைபடங்களை வரைந்தார். கூர்ந்து கவனித்தால் அவரது தத்துவங்களில் மற்றும் பேச்சில் எந்த அர்த்தமும் இருக்காது. அடிக்கடி க்ண்ணாடி முன் நின்று தன்னை அழகு பார்த்துக் கொண்டார். வழக்கத்தில் இல்லாத புதுப்புது வார்த்தைகளை உபயோகிக்க ஆரம்பித்தார். பல சமயங்க்களில் அவர் பேசுவது ஒன்றும் சக மாணவர்களுக்குப் புரியவில்லை. இந்த நடவடிக்கைகள் அதிகமாகவே, ம்ன நல மருத்துவரிடம் அழைத்துவரப்பட்டார்.

No comments:

Post a Comment