Tuesday, August 16, 2011

சாதாரண மனச்சிதைவு நோய்



இவ்வகை நோயாளிகளுக்கு நோயின் முதன்மையான அறிகுறிகளான சந்தேகம், மாயபுலன் உணர்வுகள் போன்ற அறிகுறிகள் காணப்படாது. மறைமுக அறிகுறிகளான சரிவர தன்னலம் பேணாமை, சமூக வாழ்க்கையில் இருந்து விலகி எப்பொழுதும் தனிமையே விரும்புதல், எந்த செயலிலும் விருப்பம் இல்லாமை போன்றவை காணப்படும். இந்த அறிகுறி மிகமெதுவாக மற்றும் தொடர்ந்து அதிகரிக்கும் இயல்பினையுடையது. இதன் நோயாளிகளின் நடைமுறை வாழ்க்கை மற்றும் தொழில்திறன் போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்படும். இவர்களால் மற்றவர்கள் போல் இயல்பாக செயல்படமுடியாது. 

25 வயதான சுமதி, நகைப்பட்டறை தொழிலாளி, திடீரென்று அவரது பழக்கவழக்கங்களில் மாறுதல் ஏற்பட்டன. மற்றவர்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டு ஒதுங்கி வேலை செய்ய ஆரம்பித்தார். வீட்டில் யாருடனும் பேசாமலும் அமைதியாகவும், எந்த செயலிலும் விருப்பம் இல்லாமலும் இருந்தார். ஏன் என்று பெற்றோர் கேட்டால் சரியான பதிலை அவர் தராமல் தனிமையில் சிந்தித்த வண்ணம் இருந்தார். சில சமயங்களில் தானாகவே சிரிக்கவும் தனக்குள் முணுமுணுப்பதுவகாக இருந்தார். சில நாட்களாக வீட்டுக்குள் முடங்கியிருக்க ஆரம்பித்தார். அக்கம்பக்கத்தாரின் ஆலோசனைப்படி திருமணம் செய்து வைத்தனர். திருமணத்திற்க்கு பிறகு சரியாக தூங்காமலும், எப்போதும் மிகவும் சோர்வாகவும் ஒருவித பதட்டத்துடனும் காணப்பட்டார். கணவரின் வீட்டில் புதிதாக திருமணம் ஆன பெண்தானே கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிவிடும் என நினைத்தனர். கருத்தரித்து ஒரு குழந்தையும் பெற்றார். குழந்தை பிறந்த பிறகும் அவரின் தொந்தரவுகள் அதிகமாகவும், பிறந்த குழந்தையைக்கூட கவனிக்கமலும், சரிவர குளிக்கமலும், சுத்தம் இல்லாமலும், அழுக்கு துணிகளை உடுத்திக்கொண்டு, தலையில் எண்ணெய் தடவாமலும் இருக்க ஆரம்பித்தார். நாளுக்கு நாள் இந்த பிரச்சனைகள் அதிகமாகவே குடும்ப மருத்துவரால் மனநல மருத்துவரிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.

No comments:

Post a Comment