Tuesday, August 16, 2011

சந்தேக நோயின் அறிகுறிகள்



நோய் ஆரம்பமானதும் ஏற்கெனவே அவர்களிடம் இருந்த குரோத மனப்பன்மை மேலோங்கி இருக்கும். இதனால் எல்லாவற்றிலும் சந்தேகம் கொண்டு இவர்களாகவே தப்பான அர்த்தம் கொள்வர். அடுத்தவர்களிடம் குற்றம் காணும் மன்ப்பாங்கு தான் இந்நோயின் முதல் அறிகுறியாகத் தோன்றும். நாளடைவில் மற்றாவர்களிடமிருந்து விலக ஆரம்பிப்பர். பொருத்தமில்லாமல் பேசுவதோடு அல்லாமல் மிகுந்த ஆவேச உணர்ச்சிகளுக்கும் ஆளாவர். ஆரம்பத்தில் ஏதாவது ஒன்றில் கொண்டிருந்த தவறான சந்தேகங்கள் பின் பரநது விரிந்து பல்வேறு வகையிலும் பூதகாரமாக வடிவெடுக்கும். மேலும் அச்சந்தேகங்கள் அடிக்கடி ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாறும்.

தன்னைப் பிறர் துன்புறுத்துவதாக தவறாக நம்புவதே இந்நோயின் மிக முக்கியமான அறிகுறியாகும். இவர்கள் தனித்தே இருப்பர். ஆயினும் இவர்களுடைய சமூக உறவுகள் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. சந்தேக எண்ணங்களைத் தவிர பிற விஷயங்களில் அவர்களுடைய கூரிய அறிவுத்திறன் மங்காமலிருக்கும்.

பேச்சில் அர்த்தமற்ற புது வார்த்தகள் கலந்து வர ஆரம்பிக்கும். அவை பொருளற்றதாகவும் இருக்கும். எரிச்சல் உணர்வு, திருப்தியின்மை, வெறுப்புணர்ச்சி, சந்தேகம் நிறைந்த ஆவேசம் முதலியன இவர்களிடம் இருக்கும்.

மணிமாறன் 30 வயதானவர். இந்தியா முழுவதும் கிளைகள் உள்ள ஒர் தனியார் நிறுவனத்தில் உதவி கணக்கு தணிக்கையாளராக வேலைக்கு சேர்ந்தார். இவருக்கு அரசியலில் அதிக ஈடுபாடு உண்டு. 2000ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தனது நண்பருக்காக பிரச்சாரம் செய்ய ஏற்காடு சென்றார். அப்பொழுது இவர் சிறப்புடன் பணியாற்றுவதை கண்ட எதிர் அணியினர் இவரை கொலை செய்வதற்காக சதித்திட்டம் தீட்டுவதாக இவருக்கு நினைப்பு வந்துள்ளது. உடனே அவர் சென்னை கிளைக்கு மாறுதல் வாங்கிவிட்டார். பின்னர் யாருடைய உதவியும் இல்லாமல் இவராகவே அந்த நினைப்பிலிந்து மீண்டு வந்துள்ளார். சென்னையில் அவருடைய பெண் உயர் அதிகாரியிடம் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்தனர். திடீரென்று ஒருநாள், மணிமாறன் தன் நண்பர்களிடம் அவரின் அலுவலகத்திலுள்ள இரண்டு ஆண் மேலதிகாரிகள் அந்த பெண் அதிகாரியிடம் தவறாக நடந்துக்கொண்டார்கள் என்றும் தான் அந்த நிகழ்ச்சியை பார்த்ததாகவும் நம்பினார். இந்நிகழ்ச்சிக்குப்பின் அந்த பெண் அதிகாரியின் மேல் இவர் கொண்ட நட்பு காதலாக மாறிவிட்டது.

இதன் பிறகு அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் பலர் ஒன்று சேர்ந்து பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அதில் இவருடைய பெயரும் தவறாக் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் நினைத்து இவராகவே நிறைய துப்பறியும் செயல்களில் ஈடுபட்ட்ள்ளார். இவரின் பெண் நண்பருக்கு எய்ட்ஸ் வந்துவிட்டதாகவும் கூறினார். உடனே குடும்பத்தாரால் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு எய்ட்ஸ் இல்லை என உற்தி செய்யப்பட்டது. பின்னர் இவரை சென்னையில் கொலை செய்வதற்காக கூலிப்படையினர் பின் தொடர்வதாக நினைத்து, அதிலிருந்து தப்பிக்க வேலையை இராஜினாமா செய்துவிட்டு கோவை வந்துவிட்டார். கோவையிலும் கூலிப்படையினர் பின் தொடர்வதாகவும், அதனால் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும் நண்பர்களிடம் அடிக்கடி கூறியுள்ளார். திடீரென்று ஒருநாள் இதிலிருந்து விடுபடுவதற்காக இவர் யாரிடமும் சொல்லாமல் வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு, மும்பை சென்றுவிட்டார். கையில் இருந்த பணம் தீர்ந்தவுடன் கோவை வந்துவிட்டார். அவரிடம் நண்பர்கள் விசாரித்ததில் மும்பையில் என்ன செய்தேன் என்று தெரியவில்லை என கூறியுள்ளார். பின்பு வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்க ஆரம்பித்தார். வீட்டில் இருக்கும்போது எப்போதும் அதிகமாக டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். டி.வி.யில் உள்ள கதாபாத்திரங்களுடன் பேசியதாகவும் அவர்கள் தனக்கு பதில் அளித்ததாகவும் வீட்டில் உள்ளவர்களிடம் கூறியுள்ளார். தன்னைப்பற்றிய தகவல்கள் அனத்தும் வேறு ஒர் ஊரில் டி.வி. சீரியலாக வெளிவருவதாகவும், தன்னை சாட்டிலைட் மூலம் கண்காணிப்பதாகவும் கூறியுள்ளார். கடைசியில் அவர் தான் நினைப்பது அனைத்தும் மற்றவர்களுக்கு தெரிந்து விடுகிறது என்றும் என்னை மட்டும் ஏன் கொலை செய்ய துடிக்கின்றனர் என நினைத்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். அப்போது உறவினர்களால் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.

No comments:

Post a Comment